அதிகவேக நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று(சனிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் இரண்டு கார்களினதும் சாரதிகள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் விபத்தில் காயமடைந்த 31 வயதான பெண் ஒருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் சிறிய காயங்களுடன் மயிரிழையில் உயிர்தப்பிய 48 வயதான மற்றுமொருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை எட்மன்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






