ஈரானியப் புரட்சியின் 40ஆம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
பகைமை பாராட்டும் நாடுகளின் நெருக்குதலுக்கு அடிபணியாமல், ஈரான் தொடர்ந்து அதன் இராணுவ வலிமையை விரிவுபடுத்துவதில் உறுதியாய் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா சென்ற ஆண்டு அணுச்சக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்ட பின்னர், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீது மீண்டும் தடை விதித்ததற்கு ஈரானிய ஜனாதிபதி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






