பொதுத் தேர்வு குறித்து மாணவர்களோ, பெற்றோரோ அச்சப்படத் தேவையில்லை என்று ஈரோட்டில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய போதே அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி திட்டப்படி 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்ற உத்தரவைக் கைவிட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான முடிவை தமிழக அமைச்சரவையே முடிவு செய்ய வேண்டும்.
எனவே நடப்பாண்டில் பொதுத் தேர்வு நடத்தப்படாது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.