புல்வாமா தாக்குதலைக் கண்டித்து நியூஸிலாந்து நாடாளுமன்றில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.நியூஸிலாந்தில் இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின் போது துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் குறித்த தீர்மானத்தினை கொண்டுவந்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த துணை பிரதமர், பயங்கரவாதத்தால் இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த மனவேதனையளிப்பதாக குறிப்பிட்டார்.
இதேவேளை குறித்த தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உறவினர்களுக்கும், இந்தியர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்தார்.
கடந்த 14 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீரில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 40 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தமது கண்டனங்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





