தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகி இரண்டுமே வெற்றி பெறுவது அரிதாகவே நடந்துவருகிறது.அந்தவகையில், கடந்த மாதம் 10 ஆம் திகதி வெளியான ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ மற்றும் அஜித்தின் ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் பெரும் வெற்றிபெற்றுள்ளன. இன்றுடன் இரண்டு படங்களும் வெளியாகி 25ஆவது நாள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளன.
இதனை, ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் இன்று தமிழகத்திலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, ரஜினியின் ‘பேட்ட’ வெளிநாடுகளில் பெரும் வசூலைக் குவித்துள்ளதுடன் தமிழ்நாட்டில் ‘விஸ்வாசம்’ வசூலில் முன்னிலையில் உள்ளது. தற்போது பல படங்கள் வெளியாகியுள்ளபோதிலும் குறித்த இரண்டு படங்களுக்கும் இன்னும் வரவேற்பு இருந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





