
நேற்று இரவு 8 மணியளவில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் குறித்த இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் 15 வயது இளைஞனொருவனும் காயமடைந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வெஸ்ற் மிட்லண்ட்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேர்மிங்ஹாம் நகரில் ஒரு வாரத்துக்குள் இடம்பெற்றுள்ள இரண்டாவது கத்திக்குத்துச் சம்பவம் இதுவாகும். ஏழு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவமொன்றில் இன்னொரு 16 வயது இளைஞன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
