LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, January 22, 2019

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக்கூடாது: நளின் பண்டார

புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு எமக்கு கிடைத்த சிறப்பான ஒரு சந்தர்ப்பமாகவே இப்போதைய சந்தர்ப்பத்தை நாம் கருதுகிறோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கு எமக்கு கிடைத்த சிறப்பான ஒரு சந்தர்ப்பமாகவே இப்போதைய சந்தர்ப்பத்தை நாம் கருதுகிறோம். இந்தநிலையில், இதுதொடர்பில் தேவையில்லாத அச்சம் மக்களிடத்தில் பரப்பப்படுகிறது. அரசியலமைப்பின் உருவாக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றே நாம் கோருகிறோம்.

மேலும், நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக நாம் ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துள்ளமையானது உண்மையில் சிறப்பான ஒரு செயற்பாடாகவே கருதுகிறோம். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாட்டில் இலஞ்ச- ஊழல் தலைத்தூக்கி இருந்தன.

அதற்குப் பின்னரும் குற்றச்செயல்கள் இடம்பெற்றாலும் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த நிலையை விட குறைவாகவே இருந்தன. தற்போது மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் பேசப்படுகிறது. அர்ஜுன மகேந்திரனை நாம் மறைத்து வைத்துக்கொண்டிருக்கவில்லை.

அவரை கைது செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும். இந்த மோசடியால் ஏற்பட்ட நிதியிழப்பை சமாளிக்க அரசாங்கம் தயாராகவே இருக்கிறது. ஆனால், கடந்த கால இழப்பீட்டுக்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை.

யாராக இருந்தாலும் நாம் பாரபட்சம் பாராது நடவடிக்கைகளை எடுப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். யாரையும் பாதுகாக்க வேண்டியத் தேவை எமக்கு இல்லை” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7