
ரெஜினா பல்கலைக்கழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் பொதுமக்கள் அவரிடம் கேள்விகளை தொடுத்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் சவூதி அரேபியாவுடனான ஒரு சர்ச்சைக்குரிய ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து குடியேற்றம், பற்றாக்குறைகள், மனநலத்திற்கான ஆதரவு, அதேபோல் சுங்கவரி மற்றும் கார்பன்வரி போன்ற 20ற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கும் அவர் தனது பதிலை வழங்கியிருந்தார்.
மேலும் இதன் போது இரும்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர், தீர்வைகளுடன் ஏன் அமெரிக்காவுடனான ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என கேள்வியை தொடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் “அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டிருக்கும் அனைத்து திட்டங்களும் கனேடிய மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்கள் இருவருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்தில் அமைகின்றது.
“இருப்பினும் அந்த கையெழுத்திடுவதற்கு முன்னர் இரும்பு மற்றும் அலுமினிய கட்டணத்தை குறைப்பதற்கு ஜனாதிபதியை சமாதானப்படுத்த நான் விரும்புகிறேன். மேலும் அது சாத்தியமாக இருக்காது. இவ்விடயம் அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து தெளிவாக தெரிகின்றது” என்று அவர் கூறினார்.
