சாய்ந்தமருது மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது உவைஸ் முஹம்மட் யார்த்த “தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(20-01-2019)சாய்ந்தமருது பேர்ல்ஸ் வரவேற்பு மண்டபத்தில் ஓய்வு நிலை கல்வியலாளரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ.பீர்முகம்மது தலைமையில் நடைபெற்றது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1u197xL7KO4VTG8IFRmmbMPHnCPK5Ns6K3mFFrd9v3ciKnp-qDgm36_wVmO6Oakbw6dkJK6ox0VxTZKnynx61zKYMsXp1x3-u8QrlMQj1YVAFuCsyUnWgCeiaOdwk0Z2AoiE59CKmLlw/s320/5.JPG)
எழுத்தாளர் நூறுல்ஹக் விழாவை நெறிப்படுத்தினார்.இங்கு தென்கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா பிரதம அதிதியாக் கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியை தொழிலதிபர் ஷரீப் ஹக்கீமுக்கு வழங்கி நூலை வெளியீட்டு வைத்தார். கவிஞர் எம்.நவாஸ் சௌபி நூல்பற்றிய திறனாய்வுரை நிகழ்த்தினார்
மருதம் கலை இலக்கிய வட்டதின் பொருளாளர் ஏ.எம்.எம்.ஜாபிர் வரவேற்புரை நிகழ்த்தினார்.மருதம் கலைக் கூடலின் தலைவர்; அஸ்வான் சக்காப் மௌலானா வாழ்த்துரை வழங்கினார்.கவிஞர் எஸ்.ஜனூஸ் கவி வாழ்த்துப் பாடினார்.; அறிவிப்பாளரும் ஆசிரியருமான ஏ.எல்.எம்.நயீம் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார்.
பி.எம்.எம்.ஏ.காதர்