நேட்டோ படையில் இருந்து அமெரிக்க படையினரை மீளப்பெறுவது குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் முடிவுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அதற்கு பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.
சர்வதேச இராணுவ அமைப்பான நேட்டோ படையினர் பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நாடுகளில் அமைதியை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டில் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்ட பிரேரணை மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் ட்ரம்பின் முடிவுக்கு எதிராக பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
அதற்கமைய ‘நேட்டோ’ அமைப்பில் இருந்து அமெரிக்கா விலக கூடாது என 357 உறுப்பினர்களும், விலகலாம் 22 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.





