பிரிட்டிஷ் கொலம்பியாவில் 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இதனால் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கலந்துக் கொள்ளவிருந்த நிகழ்வொன்றுக்கும் தடை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக பிரதமரின் உரையும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமூடி அணிந்து இப்போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்தவர்கள் தங்களது பெயர்களை வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
குழாய் இணைப்பொன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்தே நேற்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





