தமிழகத்தில் அ.தி.மு.க., 100 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சென்னை – தீவுத்திடலில், 45 வது சுற்றுலா பொருட்காட்சியை ஆரம்ப்பித்து வைத்து உரையாற்றிய அவர், தடைகளை தகர்த்து, மக்களுக்கு சேவை ஆற்றுவோம் என உறுதி அளித்தார்.
மேலும் மாநில அரசு திட்டங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் அத்தோடு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.





