ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கமைய அமுல்படுத்தப்படும் தேசிய போதைப்பொருள் தடுப்புவாரத்தை முன்னிட்டு பல்வேறு வேலைத்திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவருகின்றது.
இந்த வரிசையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில் பாடசாலை மட்ட மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் ஊர்வலங்கள் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலைகள் அனைத்திலும் நடைபெற்றது.ஓட்டமாவடி தேசியபாடசாலையில் போதைப்பொருள் தடுப்பு கருத்தரங்கு அதிபர் எச்.எம்.கலீம் தலைமையில் புதன்கிழமை (23) பாடசாலையின் மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.n{.சமன்குமார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சம்பிரதாய பூர்வமாக இக்கருத்தரங்கினை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் ஆலோசனைசபையின் தலைவர் வண.பிதா க.சுனில் மற்றும் மௌலவி முஸ்த்தப்பா, ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.





