LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, January 25, 2019

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஜன. 29-ல் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஸ்டெர்லைட் வழக்கில் வரும் 29-ம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை மே 28-ம் தேதி தமிழக அரசு மூடியது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து, கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இம்மாதம் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன் றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை யும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு படி ஆலையை திறக்க உடனடியாக அனுமதி வழங்க, தமிழக அரசுக்கு உத்தர விடக் கோரி, வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.பாலி நாரி மன், நவீன் சின்ஹா ஆகியோர் முன்னிலை யில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்து வருகிறது. எனவே, ஆலையை திறக்க உடனடியாக அனுமதி வழங்க தமிழக அரசுக்கு இன் றைய தினமே இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
தமிழக அரசுக்கு கேள்வி
இதற்கு, தமிழக அரசின் வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வாதத்தின் போது குறுக்கிட்ட நீதிபதிகள், ``தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏன் அமல்படுத்தவில்லை?’' என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை மீண்டும் வழங்கலாம். மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஆலையை திறக்கலாம் என கருத்து தெரிவித்தனர். ஆனால், இது தொடர்பாக உத்தரவு எதையும் பிறப்பிக்க வில்லை.
பிற்பகலிலும் இருதரப்பு வாதம் தொடர்ந்தது. அப்போது, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறுக்கிட்டு, தனது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.
29-ம் தேதி உத்தரவு
இதைத்தொடர்ந்து, ``இந்த வழக்கின் வாதம் வரும் 29-ம் தேதி தொடர்ந்து நடைபெறும். அன்றைய தினம் இந்த வழக் கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வழக்கு முடித்து வைக்கப்படும்’' என நீதிபதிகள் தெரிவித்தனர்.
எனவே, ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் வரும் 29-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7