(பி.எம்.எம்.ஏ.காதர்)
லக்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீலங்காவின் 26வது ஆண்டு நிறைவையொட்டி எற்பாடு செய்யப்பட்டுள்ள “ஒற்றுமைக்கான உறவுப்பாலம்”;,திறமைக்கான தேடல் விருது விழாவும்,கலை கலாச்சார நிகழ்ச்சியும் எதிர்வரும் 2019-01-12 திகதி காலை 8.30 மணிக்கு கல்முனை ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலைஞரும்,அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.அன்ஸார் தலைமையில் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பல்துறை சார்ந்தோர் பலர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.இங்கு மான்யா திரைப்படக் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதுடன் திரைப்படக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளது.
அகில இன நல்லுறவு ஒன்றியம்,இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கம்,இமயம் கலா மன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





