
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களை விடுவிக்கக்கோாி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், 7 பேரின் விடுதலை குறித்து மாநில ஆளுநரே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தொிவித்தது.
இதனைத் தொடா்ந்து 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவையும், ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் வழங்கியது. எனினும் தற்போது வரையில் குறித்த 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநா் எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் சிறை தண்டனை பெற்றுவரும் 7 பேரில் ஒருவரான பேரறிவாளனின் தாயாா் அற்புதம்மாள் இன்று(திங்கட்கிழமை?) தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“இன்றுடன் 100 நாள் முடிந்தது. உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. அமைச்சரவை பரிந்துரைத்தது. ஆளுநர் மௌனம் ஏன்??
நிரபராதியின் தாய் மனதை மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆளுநர் மாளிகைக்கு புரிவதெப்போ?? என கேள்வி எழுப்பியுள்ளார்.
