ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக் கொண்டாட்டம் இன்று (திங்கட்கிழமை) காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாகும். பயங்கரவாதிகளிடமிருந்து விடுதலை பெற்றதுபோல், சர்வாதிகாரிகளிடமிருந்து விடுதலை பெற்ற நாளாக இன்றைய தினம் அமைந்துள்ளது.
சர்வாதிகாரிகளை தோற்கடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். சர்வதேச சூழ்ச்சியால் தான் தாங்கள் தோல்வியடைந்ததாக மஹிந்த தரப்பினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களை வெளியேற்றியது நாட்டு மக்கள் தான் என்பதை நாம் கூறிக்கொள்ள வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்களின் எதிர்ப்பே மஹிந்த தரப்பை தோற்கடித்துள்ளது.
நாம் மக்களின் ஆணைக்கு எப்போதும் மதிப்பளிப்பவர்கள். அதற்கிணங்க தேர்தல் ஒன்று நடைபெற வேண்டுமாக இருந்தால், சட்டரீதியான அரசாங்கத்தின் கீழேயே இடம்பெற வேண்டும்.
எமது உறுப்பினர்களை பணம், பதவிகளைக் கொடுத்து வாங்கிவிடலாம் என நினைத்தார்கள். இப்போது அது அனைத்துக்கும் பாடம் புகட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும், அரசாங்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பதை இன்று முழு உலகுக்கும் காண்பித்துள்ளோம்.
எமது இறுதி இலக்கு இது அல்ல. அடுத்து வரவுள்ள ஜனாதிபதித் தேர்தலை வெற்றிக் கொள்வதுதான் எமது பிரதான இலக்காகும். அதற்குப் பின்னர் பெரும்பான்மையான நாடாளுமன்றமொன்றை நாம் ஸ்தாபிப்போம்” என சம்பிக்க ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.