25.04.1957 இல் இவர் கிண்ணியா மாலிந்துறை பிரதேசத்தில் பிறந்தார்
தனது ஆரம்ப கல்வியை கந்தளாய் பரமேஸ்வரா மகாவித்தியாலயத்தில் கற்ற இவர் தொடர்ந்து கிண்ணியா ஆண்கள் பாடசாலை கிண்ணியா மத்திய கல்லூரி கற்றதுடன் உயர் கல்வியை கொழும்பு சாஹிரா கல்லூரியிலும் கற்றார்.
1976~1979 காலப்பகுதியில் கொழும்பு பல்கவைக்கழகத்தில் கற்று சட்டமானியானார் பின்னர் சட்டக்கல்லூரியிலும் கற்று தேர்ந்தார்.
கிண்ணியாவின் முதல் சட்டமாணியும் இவரே.
16.03.1981 தொடக்கம் சட்டத்தரணியாக இவர் கடமையாற்றி வருகின்றார்.
இவர் சில காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் கடமையாற்றியுள்ளார்.
கிழக்கில் அஷ்ரப் ,நிசாம் காரியப்பரை தொடர்ந்து இவர் 03 வது ஜனாதிபதி சட்டத்தரணியாவார்.இவர் சாதாரண வறிய குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.(ந)
ஏ.நஸ்புள்ளாஹ்