திருகோணமலை பாலையூற்று வைரவர் கோயிலடி முன்பள்ளியின் 2018ம் ஆண்டுக்கான வருடாந்த கலைவிழா நிகழ்வு 06.12.2018 மாலை இடம் பெற்றது.இந்நிகழ்வில் அதிதிகளாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேசசபை தலைவர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன் மற்றும் முன்பள்ளிக் கல்விப் பணியகத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் ஆதம்பாவா தௌபிக் மற்றும் பாலையூற்று லுார்த்துமாதா திருத்தள உதவிப் பங்குத் தந்தை பிரேமானந்த் மற்றும் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதாரி ஜெசிந்தா ஆகியோர் கலந்து கொண்டி
ருப்பதையும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
அ . அச்சுதன்