திருகோணமலை சோனகத் தெரு மினா முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த கலை கலாசார நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் முன்பள்ளி ஆசிரியைகள் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா முன்னாள் நகர சபை தவிசாளர் Dr.ஹில்மி மஹ்ரூப் அவர்களும் சிறப்பு அதிதியாக திருகோணமலை சாஹிரா கல்லூரி அதிபர் அலிசப்ரி அவர்களும் கலந்து கொண்டதுடன் ஆசிரியர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர் இதன் போது மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் மாணவர்களுக்கான பரிசில்களும்,சான்றிதழ்காலும் வழங்கிவைக்கப்பட்டது.(ந)
(கிண்ணியாச் செய்தியாளர்)