LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, December 10, 2018

இரானுவ வசம் இருந்த பொது மக்களின் காணிகளின் ஒரு பகுதி இன்று விடுவிக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் இரானுவ வசம் இருந்த பொது மக்களின் காணிகளின் ஒரு பகுதி இன்று (10) விடுவிக்கப்பட்டது. கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவின் ஏற்பாட்டில் திருகோணமலையில் உள்ள ஆளுனர் அலுவலகத்தில் வைத்து இக் காணிகள் கையளிக்கப்பட்டன . 
பல வருட காலமாக இரானுவம் படை முகாம்களை அமைத்து சுவீகரித்திருந்தனர். இதனை அடுத்து உரிய பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன .தோப்பூர்,கல்லம் பத்து,சித்தாரு, பாட்டாளிபுரம் உள்ளிட்ட படையினர்களின் வசமிருந்த காணிகளே இவ்வாறு உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டன. 

இவ் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப், கிழக்கு மாகாண இரானுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் அநுர ஜெயசேகர, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார , அரச உயரதிகாரிகள் என பலர் பங்கேற்றார்கள்.
( அ . அச்சுதன்) 




 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7