LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, December 20, 2018

ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாதங்களில் திறக்கப்படும் – ஆலை நிர்வாகம் அறிவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இன்னும் இரண்டு மாதங்களில் திறக்கப்படும் என அந்த ஆலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகாரி ராம்நாத் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அனைத்துத் தரப்பு கருத்துக்களையும் கேட்ட பிறகே பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்த புதிய விதிமுறைகளை நிறைவேற்ற எங்களுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது. புதிய நிபந்தனைகளை கடைப்பிடிப்போம்.

தூத்துக்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பில் சமூக நலத்திட்டங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம்.

அந்தவகையில் 15 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும். 10 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மேலும், ஒரு பள்ளி, ஒரு மருத்துவமனை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இன்னும் இரண்டு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அதற்கான அனுமதி கேட்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7