LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, December 7, 2018

பலரும் ஆவலாக காத்திருக்கும் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் இன்று வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர் நீதிமன்றம் நீடித்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நான்காவது நாளாகவும் விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து இடைக்கால தடையை எதிர்வரும் 10ம் திகதி வரை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் வரை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், நேற்று மேலும் ஒரு நாளினால் தடை உத்தரவு நீடிக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் இரு தினங்கள் தடை உத்தரவை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ள தீர்ப்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ந)

கிண்ணியாச் செய்தியாளர்

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7