கடந்த ஆறுவருட காலமாக
மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிலவி வந்த வைத்திய அதிகாரி ஒருவர் இன்மையினை கிழக்குமாகாண ஆளுனரால் இன்று பூர்த்தி செய்யப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்
மக்கள் விடுதல புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ பிரசாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க
கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித்த போகொல்லாகமவினால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு
வைத்திய அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலை
அத்தியட்சகர் தெரிவித்தார்
இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் அக்பர்
தெரிவிக்கையில் சிறைச்சாலையில் வைத்திய அதிகாரிகளுக்கான அலுவலகம் இருந்த
போதிலும் கடந்த ஆறுவருட காலமாக வைத்திய
அதிகாரி ஒருவர் நியமிக்கப்பாடமையால் சிறைச்சாலையில் நோய்வாய்படும் கைதிகளை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லும் போது பாரிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிய
நிலை உள்ளதாக தெரிவித்தார்
இது தொடர்பாக பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவணத்திற்கு கொண்டு
சென்ற போதிலும் இது தொடர்பில் எவரும் கவனம் செலுத்தப்படவில்லை என தெரிவித்தார்
குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் விடுதல புலிகள் கட்சியின் பொது
செயலாளர் பூ பிரசாந்தனின் கவனத்து கொண்டு சென்றதை தொடர்ந்து அவரின் சிபார்சுக்கு
அமைய கிழக்கு மாகான ஆளுனறினால் தற்போது வைத்திய அதிகாரி ஒருவர்
நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
மேலும் அவர் தெரிவிக்கையில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிலவிவந்த பாரிய
பிரச்சினை ஒன்று இன்று தீர்க்கப்பட்டுள்ளது ,இதற்கு முன்னின்று செயல்பட்ட தமிழ்
மக்கள் விடுதல புலிகள் கட்சியின் பொது செயலாளருக்கும் ,வைத்திய அதிகாரி ஒருவரை
நியமித்த ஆளுனருக்கும் தமது நன்றிகளை தெரிவித்துகொண்டார்
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
தமிழ் மக்கள் விடுதல புலிகள் கட்சியின் பொது செயலாளர் பூ பிரசாந்தன்,
சிறிலங்கா சுதந்திர கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ராஜன் மயில்வாகனம் , ஐக்கிய தேசிய
கட்சியின் மாவட்ட இணைப்பாளர் வி . மகேஸ்வரன் ,பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி கிரேஸ் , தாய் சேய் நல வைத்திய அதிகாரி அச்சுதன் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள்
கலந்துகொண்டனர்