LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Wednesday, December 19, 2018

நாம் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபடவில்லை: திஸ்ஸ விதாரண

நாட்டில் கடந்த 50 நாட்களாக இடம்பெற்றது ஒரு பாரிய சூழ்ச்சியாகும் என ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பினர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக  அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இது ஒன்றும் அரசியல் சூழ்ச்சியல்ல. எனவே, இனியும் காரணங்களைக் கூறிக்கொண்டிருக்காமல் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டில் கடந்த 50 நாட்களாக இடம்பெற்றது ஒரு பாரிய சூழ்ச்சியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தரப்பினர் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழ்ச்சியைத் தோற்கடித்ததன் ஊடாக, ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுவிட்டதாகவும் அந்தத் தரப்பினர் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையான சூழ்ச்சி 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி தான் நாட்டில் இடம்பெற்றது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது.

எமது நாட்டின் சொத்துக்கள் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்கும் நிலைமை ஏற்பட்டது. மக்களுக்கு வாழ்க்கைச் சுமை மற்றும் வரிச்சுமை என்பன அதிகரித்தது.

மேலும் மக்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்பன இந்தக் காலத்தில் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதுபோன காரணத்தினால்தான், ஜனாதிபதி ஒக்டோபர் 26 ஆம் திகதி இந்த முடிவினை எடுத்தார்” என திஸ்ஸ வித்தாரன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7