அகரம் கலைக்கழகத்தின் படைப்பாக கல்முனைப் பிரதேசத்தில் பார்வை குறுந்திரைப்படம் தயாராகிவருகின்றது.
குறுந்திரைப்பட இயக்குநர் கலைமாமணி அகரம் செ.துஜியந்தனின் எண்ணம், எழுத்து, இயக்கம், தயாரிப்பில் உருவாகியுள்ள இக் குறுந்திரைப்படம் எதிர்வரும் பொங்கலன்று திரையிடப்படவுள்ளது.
அகரம் செ.துஜியந்தனின் ஆறாவது குறுந்திரைப்படமான பார்வை படத்தின் ஒளிப்பதிவினை கலைஞர் ரா.ரகு மேற்கொண்டுள்ளார். இசை ஜே.ஆர்.வினோத் வழங்கியுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த நாயும், ஐந்தாம்வகுப்பு படிக்கும் ஒரு சிறுவனின் மனப்போராட்டமுமே இப்படத்தின் உயிரோட்டமான கதைக்களமாகும். ஐந்து நிமிடம் மாத்திரம் ஓடக்கூடிய படமாக பார்வை தயாரிக்கப்பட்டுள்ளது.
சமூகப்பிரச்சினை ஒன்றின் அவலத்தை படம் பிடித்துக்காட்டும் செ.துஜியந்தனின் பார்வை குறுந்திரைப்படம் அவரது ஆறாவது படைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.