வடமாகாணம் சென்ற இக்குளுவினரை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனம் கூட்டுறவு திணைக்களத்தின் வழிகாட்டலில் கடந்த 26.12.2018 அன்று அழைத்துச்சென்றது.
முதல்நாள் வவனியா பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் இக்குளுவினரை வரவழைத்து சங்கத்தின் நடவடிக்கைளை தெளிவு படுத்தினார்.
பிற்பகல் கரைச்சி தெற்கு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் நடவடிக்கைள் வரத்தக நடவடிக்கைளை இக்குளுவினர் பார்வையிட்டு பொதுமகாமையாளர் தலைமையிலான குளுவினருடன் அனுபவங்களைபகிர்ந்து கொண்டதுடன் அச்சங்கத்தின் வியாபார மற்றும் வங்கி நடவடிக்கைகள் பற்றியும் ஆராய்ந்தனர்.
இவ்வாறே 27.12.2018 அன்று யாழ் ப்பாணம் யாழ்கோ பால் உற்பத்தி நடவடிக்கைளை யாழ் மாவட்ட கூட்டுறவு அபிவிருத்திச்சங்க தலமையகத்தில் நேரடியாகச்சென்று பார்வையிட்டதுடன் சங்க நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தனர்.
இறுதியாக இக்குளுவினர் திருகோணமலை சர்வோதய நிலயத்தில் இன்று பயணத்தின் நன்மைதீமைகளை ஆரய்ந்தனர். இங்கு திருகோணமலைக்கூட்டுறுவு உதவி ஆணையாளர் க.வேல்வேந்தன்,தலமைக்கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் நசீர், அகத்தின் இணைப்பாளர் த.திலீப்குமார்,மதியுரைஞர் பொ.சற்சிவானந்தம் உள்ளிட்டவர்கள்கலந்துகொண்டு தொடர்நடவடிக்கைள் பற்றி இக்குளுவினர்கு தெளிவு படுத்தினர்.
அ . அச்சுதன்