பதுளை மாவட்ட மையங்கனை தமிழ் மொழி டிப்ளோமா
பயிற்சிக் கல்லூரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை
மேற்கொண்டுள்ளனர்
கட்டான பொலிஸ்
சேவைக்கால மற்றும் தமிழ் மொழி பாட நெறிக்கான பணிப்பாளர் எஸ் எஸ் பி .
செல்வராஜா வழிகாட்டலின் கீழ் மையங்கனை மற்றும் மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் தமிழ்
மொழி டிப்ளோமா பயிற்சிக்
கல்லூரியின் இணைப்பாளர் ஐ பி . பேரின்பராஜா தலைமையில்
மையங்கனை தமிழ்மொழி டிப்ளோமா
கற்கை நெறியினை கற்கும் பொலிஸ்
உத்தியோகத்தர்கள் கலாசார சுற்றுலா ஒன்றை மட்டக்களப்பு
மாவட்டத்தில் மேற்கொண்டுள்ளனர் .
மட்டக்களப்பு
தமிழர்களின் கலை , கலாசாரம் , பண்பாடு போன்ற விடயங்களை கற்றுக்கொள்ளும்
நோக்கில் வருகைதந்துள்ளனர் .
இதன் ஒரு நிகழ்வாக
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயத்தை
மேற்கொண்டு , ஆலயத்தில் இடம்பெறுகின்ற பூஜை வழிபாடுகளில்
கலந்துகொண்டனர்
இந்த கலாசார சுற்றுலா
விஜயத்தில் தமிழ் மொழி பாடநெறி ஆசிரியர்கள் தமிழ் மொழி பயிற்சிக் கல்லூரி
பொலிஸ் உத்தியோகத்தர்கள்
கலந்துகொண்டனர்
