மதுரை ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறையை நேற்றிரவு 8 மணியளவில் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர், ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் எனவும் கூறி, அவர் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து ரயில்நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அங்கு சரக்கு பெட்டகங்கள் வைக்கப்பட்டிந்த பகுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை, இதனையடுத்து, வெடிகுண்டு வைக்கப்பட்டதாக வெளியான தகவல் புரளி என்பது தெரியவந்தது