இவ் விழாவில் பிரதம விருந்தினராக திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன் அவர்களும், விசேட விருந்தினராக திருகோணமலை வலயக்கல்வி அலுவலகத்தின் நடனஆசிரியர் ஆலோசகர் திருமதி. விஜயா ஜெயகணேஷ் அவர்களும், கெளரவ விருந்தினராக திருகோணமலை புனிதமரியாள் கல்லூரியின் ஆரம்பக்கல்வி ஆசிரியர் திருமதி. மேகலாதேவி யோகராஜா அவர்களும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
விழாவில் சிறார்களின் கணபதி நடனம், கும்மிநடனம்,கோலாட்டம், விஷமக்கார கண்ணன்,கீதாசாரம் உட்பட பல கலைநிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. (அச்சுதன் )