skip to main | skip to sidebar
LATEST NEWS
தட்டுங்கள்

  • முகப்பு
  • செய்திகள்
    • தாயகம்
    • இந்தியா
    • கனடா
    • உலகம்
    • கட்டுரை
    • விளையாட்டு
  • கலை இலக்கியம்
    • நாவல்
    • சிறுகதை
    • கவிதை
    • இலக்கியக் கட்டுரை
    • இலக்கிய நிகழ்வுகள்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • பலதும் பத்தும்
  • திருமணசேவை
  • மேலும்
    • நகைச்சுவை
    • மரண அறிவித்தல்
    • கட்டணம் செலுத்த
    • விளம்பர விபரம்
  • தொடர்பு


Snowfall Widget for Blogger

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+7°C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


WWW.VELANAI.COM

















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, November 13, 2018

பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை



திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.
இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர்.

இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதனை விடவும் கடந்த நவம்பர் 29-ஆம் தேதி,திருவனந்தபுரம் பத்மநாப சாமி கோவிலின் அரசுத்தரப்பு நிர்வாகியான சதீஷ் என்பவர் பெண் பக்தர்கள் பத்மநாப சாமி கோவிலுக்குள் சுடிதார் அணிந்து சாமி தரிசனம் செய்யலாம் என அறிவித்தார் இது சர்ச்சை ஆகி நீதிமன்றம் வரை சென்றது.

இதன் பின்னணி யாதெனில் கோவில் நிர்வாகியான ஹரிபாலை கலந்தாலோசிக்காமல் இந்த நடவடிக்கையை அவர் எடுத்ததாகவும் கூறி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், தமது தீர்ப்பில்  .”பத்மநாப சாமி கோவிலுக்குள் பெண்கள் சுடிதார் அணிந்து வர தடை விதிக்கப்படுகிறது என்றும் சதீஷ் கோவிலின் ஒரு பணியாளர்தானே தவிர,கோவிலின் ஆகம விதிகளை மீறும் வகையில் அவரால் உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரமில்லை.”எனவும் அறிவுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Attachments area




SIMILAR ARTICLES

2nd Year Anniversary

2nd Year Anniversary


பிரபல பதிவுகள்

  • எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...
    ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...
  • ஆடிப்பிறப்பும் தமிழர் வாழ்வும்
    ஆடிப்பிறப்பு சைவத் தமிழ் மக்களினால் ஆடி மாத முதலாம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சூரியன் வடதிசை நோக்கிச் செல்லும் தை முதல் ஆனி வரையு...
  • பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளினூடாக மனித விழுமிய மேம்பாடுகளைக் கற்பித்தல்
    பாடசாலைகளில் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளினூடாக மனித விழுமிய மேம்பாடுகளைக் கற்பித்தல் 'இன்றைய சிறுவர்களே நாளைய தலைவர்கள்' இத் த...
  • கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் 'கிளீன் ஸ்ரீலங்கா' புதுவருட ஆரம்ப நிகழ்வு
    (க.ஜெகதீஸ்வரன்) புதிய ஆண்டுக்கான கடமைகளை வைபவ ரீதியாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 2025.01.01ஆம் திகதி வலயக்கல்வி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற...
  • புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கல்
    கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை கோட்டத்துக்குட்பட்ட வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட...

தொடர்பிற்கு

Name

Email *

Message *

Powered by Blogger.
 

தட்டுங்கள்.com

| Home | Sri Lanka | India | Canada | World |

www.thattungal.com © 2018

+16479860046 (Canada)
+94774338878 (Sri Lanka)

thattungalweb@gmail.com

தட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு

Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7