LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, November 29, 2018

உடைத்தலும், பகிர்தலும் -30




இந்த நற்கருணை ஆண்டிலே, நற்கருணையின் உள்ளாந்த அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, அதற்குகந்தபடி வாழ்வதே நாம் வாழ  தம்மைத் தந்த, நமக்காகத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்த இறைமகன் கிறீஸ்துவுக்க நாம் கூறும் நன்றியாக இருக்க முடியும்.

நற்கருணைக்கு எத்தனையோ அர்த்தங்கள் இருக்கக்கூடும். ஆனாலும் அவற்றுக்குள் மேலானதொன்றாக அமையக்கூடியது  அதில் அடங்கியுள்ள உடைத்தலும், பகிர்தலுமாகத்தான் இருக்க முடியும். நற்கருணையை உருவாக்கிய இரவிலே யேசு இதைத்தான் செயலில் காண்பித்தார். ' இதோ இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று அப்பத்தைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்த பிறகுதான் வசனம் உரைக்கின்றார்.

ஆம்! முதலில் அப்பத்தை உடைக்கிறார், பின்னர் அவர்களுக்காக அதைக் கொடுக்கிறார்.

குறித்த அந்த இரவில், நற்கருணையின் மூலமாகத், தம்மை அவர் மண்ணின் மக்களுக்காக ஒப்படைக்கவும், கீலம் கீலமாக்கப்பட்டு உருவழிக்கப்படவும், மரணத்தின் கொடுமையை அனுபவிக்கவும் இருப்பதை அவர் தனது இத்தகைய செயல்களின் மூலம் உணர்த்துவதை அவதானிக்க முடிகிறது.

பல  கோதுமை  மணிகள் உடைவதில்தான் அப்பம் உருவாகிறது. ஆந்த அப்பம் உடலுக்குள் உடைந்து சிதைவடைவதில்தான் அது சமிபாடாகி உடலுக்கு வலுவாகின்றது.

எனவே நற்கருணையின் அடிப்படையே உடைதல் என்றவாறாக அமைவதை நாம் காண்கிறோம். இந்த உடைதலின் தொடர்ந்தேர்ச்சியாக அமைவது பகிர்தல். மொத்தத்தில் நற்கருணையில் உள்ள பிரதான செயற்பாடுகளான உடைதலும், பகிர்தலும் பிறருக்காக வாழ்வதில் அவசியமான பங்களிப்பாக அமைகின்றன. அப்பம் முழுமையாக இருக்கும் வரை அதனால் பலன் கிட்டுவதில்லை. அதுபோல நம்மை முழுமையாக வைத்துக் கொண்டு, அடுத்தவரை நேசித்து வாழ்வதென்பது நடக்க முடியாததொன்று.  நம்மை விட்டுக் கொடுத்தும்- சில சமயங்களில் இழந்தும் வாழாதவரை நம்மால் பிறரையும் அவர் மூலமாக இறைவனையும் சேவித்து வாழ முடியாது.

அதனால்தான் நம்மை உடைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. எமது தனித்துவத்தை, எம் முழுமையை, எம் கொள்கைகளை, பிடிப்புக்களை, ஆசா பாசங்களை நாம் உடைத்துக் கொள்ள வேண்டும், எம் சுய நலத்தை, நாம் ஆர்வத்தோடு பேணி வரும் நலங்களை, எம் சிந்தனை சொல் செயல்களை கொஞ்சமாவது விட்டுக் கொடுக்காதவரை எம்மால் அடுத்தவருடன் சேர்ந்து வாழவே முடியாது. அப்படியிராதவரை அடுத்தவனுக்hக வாழ்வது என்பது மட்டும் சாத்தியமாக முடியாது!

நும்மை முற்றுமுழுதாக வைத்துக் கொண்டு, கொஞ்சமும் குறையாமல் பார்த்துக் கொண்டு, பிறருக்;காக வாழ முற்பட்டால் அதில் நாம் தோற்றுப் பேய்விடுவோம்.

எனவேதான் அயலவருக்காக நாம் வாழ்வதென்பது எம் இயல்பிலே ஒரு மாற்றத்தைப் - பெரும்பாலும் ஒரு குறைவை. ஒரு இழப்பை  ஏற்படுத்தும் செயலாகிறது. ஒரு உடைவை அது எமக்குத் தருகிறது.

அடுத்தவரோடு நாம் எதையும் பகிர்ந்து கொள்ளாதவரை அவர்களை அன்பு செய்கிறவர்களாக நாம் இருக்க முடியாது. குறைந்த பட்சம் நம் அன்பிலாவது ஒரு பகிர்தலைச் செய்ய வேண்டித்தானே இருக்கிறது?


தமது அன்பைப் பகிர்ந்து கொள்ள முன் வருபவர்கள், தாம் அன்பு செய்பவருக்காக இழப்புக்களை-உடைவைத் தாங்க என்றுமே தயங்குவதில்லை.

கிறீஸ்து நம்மை அன்பு செய்தார்- அதுவும் முழுமையாக அன்பு செய்தார். அந்த அன்பின் வேகத்தால் தம்மையே உடைத்துக் கொண்டார், இழந்தார்.

இந்த அன்பை அடி நாதமாகக் கொண்ட ஆதித் திருச்சபையைத்தான் அன்பியமாக அனுபவிக்க எம்மில் பலரும் முயல்கின்றனர். ஆனாலும் கிறீஸ்துவின் அன்பின் முழு வெளிப்பாடான நற்கருணை நமக்குச் சொல்லித் தரும் வாழ்வை நாம் வாழும்போதுதான்- அதாவது, நம்மை உடைத்துப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும்போதுதான் நாம் அன்பியமாக மாறுகிறோம் என்பதுவே உண்மை!



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7