மாவட்ட செயலக சிறு தொழில்முயற்சி அபிவிருத்தி பிரிவின்ஏற்பாட்டில் ‘மட்டுமுயற்சியாண்மை – 2018’ எனும்தொனிப்பொருளிலானசிறுதொழில் முயற்சியாளர்களைஊக்குவிக்கும் வர்த்தககண்காட்சி நவம்பர் 03,04,05 ஆம்திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில்மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மா.உதயகுமாரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
காலை 10.00 மணி தொடக்கம்இரவு 10.00 மணி வரைநடைபெறவுள்ள மட்டக்களப்புமாவட்டத்திலுள்ள சிறிய மற்றும்நடுத்தர முயற்சியாளர்களின்உற்பத்திகளை ஊக்குவிக்கும்முகமாகவும் அவர்களுக்கானஒரு சிறந்த சந்தை வாய்ப்பாகவும்அமையவிருக்கின்ற இக்கண்காட்சியை இலவசமாகப்பார்வையிட முடியும் என மாவட்டசெயலகம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களைச்சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தரஉற்பத்தியாளர்களின்கைவினைப் பொருட்கள், உணவுஉற்பத்திகள், பனையோலைஉற்பத்திகள், கைத்தறிஉற்பத்திப்பொருட்கள், மட்பாண்டஉற்பத்திகள், சிற்பங்கள் மற்றும்பாதணிகள் என பல்வேறுஉற்பத்திப்பொருட்கள் இங்குகாட்சிப்படுத்தப்படஇருக்கின்றன.
இதனடிப்படையில் எமதுநோக்கம் மாவட்டரீதியில்காணப்படும் சிறிய மற்றும்நடுத்தர முயற்சியாளர்களைஊக்குவிப்பதும் அவர்களதுஉற்பத்திகளைவிளம்பரப்படுத்தலும்அவற்றிக்கானசந்தைவாய்ப்பினை ஏற்படுத்திகொடுத்தலுமாகும்.
அந்தவகையில் எமதுமாவட்டத்தில் சிறிய மற்றும்நடுத்தர முயற்சியாளர்களைஊக்குவிப்பதனூடாக எமதுமாவட்டத்தின் வறிய மக்களின்பொருளாதாரத்தினைமேம்படுத்துவதோடு ஒருதன்னிறைவான சமூகக்கட்டமைப்பை உருவாக்குவதேஎமது எதிர்காலத்திட்டமாகும்.