LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, August 9, 2022

தியாகி அறக்கொடை நிதியத்தினால் களப்பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு உதவி!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிக்க இச்சூழலில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டு மக்களின் செய்திகளை சமூகப் பொறுப்போடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு செல்லும் பல்வேறு ஊடகங்களில் பிராந்திய செய்தியாளர்களாக களப் பணியாற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலரும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலைமையை கருத்திற் கொண்டு நாடளாவிய ரீதியில் இன, மத வேறுபாடின்றி பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் ஸ்தாபகத் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான " சமூகஜோதி" வாமதேவன் தியாகேந்திரன் அவர்களிடம் மட்டக்களப்பு கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மாவட்டத்தில் ஊடகவியலாளர்களாக களப்பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட 30 தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக தலா பத்தாயிரம் ரூபாய் (10,000) வீதம் அன்பளிப்பு தொகை வழங்கி வைக்கப்பட்டது. ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கல்குடா மீடியா போரம் - மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்மைத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைவாக இவ் அன்பளிப்பு தொகையினை வழங்கும் நிகழ்வு கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் ஏறாவூர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை 08.08.2022 இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாராமெளஜுத், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப்பணிப்பாளரும் தியாகி அறக்கொடை நிதியத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் எம்.எல்.எம்.என். நைறூஸ், ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் எஸ்.ஏ.எம். நளீம், உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன் போது கல்குடா மீடியா போரத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7