LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, January 3, 2022

புணானையில் ஆர்ப்பாட்டம் - இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வாக்குறுதியால் கலைந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

 மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் வாகரை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்திற்குட்பட்ட புணானை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவினை இணைப்பது தொடர்பாடன விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 02.01.2022 ஆந் திகதி பிரதேச மக்கள்  வீதியில் இறங்கி  எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்ட்தில் ஈடுபட்டனர்.


தமிழ், சிங்களம் என இரு தரப்பு மக்களும் இணைந்து இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். தாங்கள் வழக்கமாக கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் நிர்வாகத்தின் கீழ் தங்களது அரச நிர்வாக நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் தற்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் நிர்வாக நடவடிக்கைக்குள் திடீர் என தங்கள் கிராமம் உள்வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தங்களுக்கு கவலையளிப்பதாக தெரிவித்தே கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இருந்து காணி தொடர்பான எல்லை நிர்ணயக் குழுவொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை புனானை பிரதேசத்திற்கு சென்று எல்லை நிர்ணயம் தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவ் விடயம் தொடர்பாக அறிந்த பிரதேச மக்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு   கொண்டு சென்றவுடன், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று ஆர்பட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடலை மேற்கொண்டார். 

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தாங்கள் வாகரை பிரதேச செயலகத்துடன் இணைந்தே வாழப்போவதாகவும்  கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துடன் இணைந்து வாழ விருப்பமில்லை எனவும் இதனை தடுத்து நிறுத்தி தறுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் தன்னால் இயன்ற உதவிகளை மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹபிஸ் நசிர் அஹமட் தெரிவிக்கும் காணி தொடர்பான புள்ளி விபர நடவடிக்கைகளை தாம் ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும், வாகரை பிரதேச செயலகம், கிரான் பிரதேச செயலம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு  பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்ந்து வருவதாகவும்,  மக்களுக்கிடையில் இன முரண்பாட்டினை ஏற்பாடுத்தும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது என அமைச்சர் இதன்போது கருத்து தெரிவித்ததுடன், இராஜாங்க அமைச்சரின் வாக்குறுதியை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7