LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Tuesday, October 20, 2020

மினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று!


 மினுவங்கொட கொத்தணியில் மேலும் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இன்று இரவு 07 மணி இதுவரையான காலப்பகுதியில் மட்டும் புதிதாக 87 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இறுதியாக அடையாளம் காணப்பட்டவர்களில் 21 பேர் கொரோனா தொற்று உறுதியாகியவர்களுடன் நெருங்கமாக பழகியவர்கள் என்றும் 19 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மினுவங்கொடை ஆடை தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,162 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 625 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொற்றுக்கு உள்ளான 2172 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இந்தத் தொற்றில் இருந்து இதுவரையில் 3 ஆயிரத்து 403 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 297 பேர் தொடர்ந்தும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றினால் இலங்கையில் இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7