LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, September 4, 2020

ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிள்ளையானிடம் ஐந்து மணிநேர வாக்குமூலம்!

நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரக்காந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  சுமார் 5 மணி நேர வாக்குமூலம் பதிவுசெய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இதன்படி அவர் இன்று முற்பகல் 9.45 அளவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்தார்.
இந்த நிலையில், சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் சுமார்  5 மணி நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், நேற்றையதினம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து, கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதேவேளை, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாளையதினம் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7