LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, August 1, 2020

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!

2020 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சகல ஒழுங்குகளும் பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக திகாமடுல்ல மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்தார்.
அத்துடன், கொரானா வைரஸ் தொடர்பான நடைமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான திகாமடுல்ல தேர்தல் மாவட்ட நிலைமை குறித்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தெரிவிக்கையில், “அம்பாறை (திகாமடுல்ல) மாவட்டத்தின் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தொகுதிகளிலும் ஐந்து இலட்சத்து 13 ஆயிரத்த 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இதன்படி, அம்பாறை தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 77ஆயிரத்து 144 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90 ஆயிரத்து 405 பேரும் கல்முனை தேர்தல் தொகுதியில் 77ஆயிரத்து 637பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 68 ஆயிரத்து 793 பேரும் 2019ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இவர்கள், வாக்களிக்கவென 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி தொகுதி வாரியாக அம்பாறை தேர்தல் தொகுதியில் 181 வாக்கெடுப்பு நிலையங்களும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்கெடுப்பு நிலையங்களும் கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிப்பு நிலையங்களும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
எனவே, கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளைப் பின்பற்றி எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

4Shares


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7