LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, August 6, 2020

மன்னாரில் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு இடம்பெற்றது – அரசாங்க அதிபர்

மன்னார் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பாரிய வன்முறைகள் இன்றி அமைதியான முறையில் இடம்பெற்றதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைதெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “மன்னார் மாவட்டத்தில் 62 ஆயிரத்து 675 பேர் இம்முறை வாக்களித்துள்ளனர். மொத்தமாக 79.49 வீத வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
தற்போது வாக்குச்சாவடியில் இருந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வாக்கு எண்ணும் நிலையமாக உள்ள மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலைக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுவரப்படுகின்றது.
மேலும் மொத்தமாக 92 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இன்றைய தினம் மாத்திரம் 30 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த முறைப்பாடுகள் அனைத்தும் சிறிய முறைப்பாடுகளாகவே காணப்பட்டது.
பாரிய பிரச்சினைகள் எதுவும் இடம்பெறவில்லை. பொலிஸாரின் உதவியுடன் முறைப்பாட்டு அதிகாரிகள் சென்று தீர்வு கண்டுள்ளனர்.
தேர்தல் மிகவும் சுமூகமான முறையில் மன்னாரில் இடம்பெற்றுள்ளது. 15 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் நாளைய தினம் இடம் பெறவுள்ளன” என மேலும் தெரிவித்தார்.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7