LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, August 6, 2020

பலத்த பாதுகாப்பிலுள்ள முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் நிலையமான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வித்தியானந்தா கல்லூரி வளாகத்தினைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கல்லூரியின் வாயில்கள் மூடப்பட்டு, கல்லூரி வளவினுள் செல்வதற்கு தடை என்பதான அறிவித்தல் பலகை வைக்கப்பட்டு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கல்லூரி வாயிலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை, கல்லூரியினுடைய வெளிப்புறத்தில் நான்கு மூலைகளிலும் தற்காலிகமாக தகரப் பந்தல்கள் இடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைவிட முல்லைத்தீவு, மாங்குளம் பிரதான வீதியில், வித்தியானந்தக் கல்லூரியின் அருகாமையில், இரு இடங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸார்  பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் வித்தியானந்தா கல்லூரியின் பின்புற வீதி முற்றாக மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7