காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகயீனம் காரணமாக வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்துள்ளார்.
காணாமலாக்கப்பட்ட தங்களுடைய பிள்ளைகளின் உண்மை நிலையினை வெளிப்படுத்துமாறு கோரி வவுனியாவில் கடந்த 1222 நாட்களை கடந்து தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான விக்கினேஸ்வரன் என்பவரை தேடி குறித்த போராட்டங்களில் கலந்து கொண்ட செட்டிகுளம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது69) என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நாளை இடம்பெறவுள்ளது. இதேவேளை தனது மகனைத்தேடி வவுனியாவில் இடம்பெற்றுவரும் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த மற்றொரு தந்தையும் அண்மையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)