![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEikQkv5GT09cojg9KQM7gUxxRnG17RnyBRqx0ZZjHLDd2-YDbvr35_xWjMqffDI49RDC3XR3tvVKevCG36pLQTIg5pTLpcPoawfSMtlpDXNrDnFal0JWzGM0tbhXw-P18qE0tbSBmGCvZM/s320/thattungal.com.jpg)
கனடாவில் நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 119 பேர் புதிய நோயாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ள அதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் 15 பேர் மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.
இதுவரை மொத்தமாக அங்கு 9 ஆயிரத்து 731 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் அதில், 120 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளநிலையில் மொத்தமாக 7 ஆயிரத்து 886 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, 1736 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
கனடாவின் கியூபெக் மாகாணமே அதிகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை மொத்தமாக 4 ஆயிரத்து 611 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒன்ராறியோவில் அதிக பாதிப்பு உள்ள நிலையில் அங்கு 2 ஆயிரத்து 392 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் ஆயிரத்து 66 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)