LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 10, 2020

கொரோனா நெருக்கடியின் பிடியில், பிரிட்டிஸ் பல்கலைக்கழகங்களும் சிக்கியுள்ளன.

கொரோனா வைரஸ் நெருக்கடியிலிருந்து மீளுவதற்காக பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் பில்லியன் கணக்கான பவுண்டுகள் மதிப்புள்ள ஆராய்ச்சி மற்றும் அதற்கான நிதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. பாதீட்டைக் குறைப்பதன் மூலமும் மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் வரையறைகளை தாம் பேணுவதன் மூலமும் இந்த வேண்டுகோளை நிறைவேற்றக் கோரியுள்ளனர்.

பிரித்தானியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான செயின்ட் அண்ட்ரூஸ் பல்கலைக்கழகமானது கொரோனா தொற்றினால் அதன் நிதிநிலைமையில் பாரிய இழப்பைச் சந்தித்திருக்கிறது என கார்டியன்  சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நெருக்கடிக்குப் பதிலுறுத்தும் வகையில், ஆராய்ச்சிகளுக்கான நிதியை இரட்டிப்பாக்குமாறும், பாதிப்புற்ற கல்வி நிறுவனங்களுக்கு அவசரகால கடனை வழங்குமாறும், அத்துடன் 2020-21 இல் பட்டப்படிப்பிற்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரி பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் திட்டத்தை முன்வைத்துள்ளன.

பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் பாரிய நிதிநெருக்கடியை எதிர்கொள்வதாலேயே அரசாங்கத்தின் உதவியை நாடியிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
செலுத்தப்படாத மாணவர் கடன்களிலிருந்து இழப்புகளைக் குறைத்துக்கொள்ள வழிவகுக்கும் மாணவர் சேர்ப்பை மட்டுப்படுத்தும் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் ஆதரவை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது. பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்ப்பை மட்டுப்படுத்த வேண்டுமென என அமைச்சர்கள் அழுத்தி வந்ததை கார்டியன் கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7