![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDzVxpuQpl-LjfhgBogWc73S13AoLBCdCyqPiZXTAPX1QWyxNSnkNWULcGR-vbWDSgsZEUbcLihTQqRrFHJ1u0c7hPZUaOvv_knf-3DBO3Kud6R2u_N_niYQpDDAdlE_NIVHizJxcHEx4/s320/thattungal.com.jpg)
கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி உலக நாடுகளை உலுக்கிவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கொரோனாவை சிறப்பாகக் கையாளும் உலக தலைவர்கள் யார்? என்பது குறித்து மோர்னிங் கென்சல்ற் (morningconsult) என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக 36 புள்ளிகளுடன் மெக்சிகோ ஜனாதிபதி லோபஸ் ஒப்ரடோர் 2ஆவது இடத்திலும், 35 புள்ளிகளுடன் இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
அதேசமயம், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மறை 3 (-3) புள்ளிகளுடன் 8ஆவது இடத்தில் உள்ளார். அதேபோல் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மறை 21 (-21) புள்ளிகளுடன் 9ஆவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மறை 33 (-33) புள்ளிகளுடன் 10 ஆவது இடத்திலும் உள்ளனர்.
![](https://2.bp.blogspot.com/-v4HCd1A1DGQ/U1EPV63gLrI/AAAAAAAADUk/V-XfYp4NII0/s1600/comment.jpg)