LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 10, 2020

ஒடிசாவில் 30ஆம் திகதிவரை ஊரடங்குச் சட்டம் நீடிப்பு!

ஒடிசாவில் எதிர்வரும் 30ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.  ஒடிசாவில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 25ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமலுக்கு வந்த பிறகு எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர், மாநில முதலமைச்சர்களுடன் அவ்வப்போது காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு இன்றோடு 16 நாட்கள் ஆகியுள்ள போதிலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால், வரும் 14ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்கள் மற்றும் நிபுணர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்து வருகின்றன.

வரும் 11 ஆம் திகதி முதல் அமைச்சர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒடிசாவில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7