கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தடை உத்தரவை மீறியதாக தமிழகம் முழுவதும் இதுவரை 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை உத்தரவை மீறி அநாவசியமாக வெளியே சுற்றி வருவோர் மீது தமிழக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இதுவரை விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக 2.24 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்ட 2.39 இலட்சம் பேர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2.03 இலட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து ஒரு கோடியே 17 இலட்சம் ரூபாய் (இந்திய மதிப்பில்) வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.





