LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Monday, April 20, 2020

தமிழகத்தில் மீண்டும் சடுதியான அதிகரிப்பு: மேலும் 105 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் மேலும் 105 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 477 ஆக உயர்வடைந்துள்ளது.

சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் அங்கு மொத்த எண்ணிக்கை 285 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், விழுப்புரத்தில் 7 பேரும் கடலூரில் 6 பேரும் தென்காசியில் 4 பேருக்கும் இன்று வைரஸ் இனங்காணப்பட்டுள்ளது.

இதனைவிட திருநெல்வேலி, மதுரை, விருதுநகரில் தலா 2 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து நாட்களாக புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 இற்கும் கீழாக இருந்தநிலையில் இன்று சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7