LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, April 24, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம்

தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக ஒரே நாளில் சுமார் 1 கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம்
அறவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று(வியாழக்கிழமை) வரையான காலப்பகுதியில் ஊரடங்கை மீறிய 2 இலட்சத்து 85 ஆயிரத்து 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், ஊரடங்கு உத்தரவை மீறிப் பயணித்த 2 இலட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவை மீறியதற்கான அபராதமாக இதுவரை 2 கோடியே 68 இலட்சம் இந்திய ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் வரை 1 கோடியே 46 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் பெறப்பட்டிருந்த நிலையில், அதன் பின்னர் நேற்று வரையான ஒரே நாளில் ஒரு கோடியே 20 இலட்சம் இந்திய ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7