LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, March 7, 2020

தமிழகத்தில் கொரானா சிறப்புப் பரிசோதனை மையங்கள் குறித்து விசேட கள ஆய்வு!

தமிழகத்தில் இதுவரை கொரானா பாதிப்பு இல்லை என
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களைத் தொடர்ந்து துறைமுகங்கள், ரயில் நிலையங்களிலும் பரிசோதனை செய்யப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், கொரானா சிறப்பு பரிசோதனை மையத்தில் பயணிகளுக்கு நடைபெறும் சோதனைகளை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (வெள்ளிக்கிழமை) ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கொரானா குறித்து அச்சம் வேண்டாம் என்றும் அதேசமயம் கவனமாக இருக்குமாறும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “ரயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கொரானா சிறப்பு பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

80 வீதம் கிருமிகள் கைகள் மூலமே பரவுகின்றன. அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும்” என அவர் கேட்டுகொண்டார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7