LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Thursday, March 5, 2020

28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று – மத்திய சுகாதாரத் துறை உறுதி

இந்தியாவில் இதுவரை இத்தாலியைச் சேர்ந்த 16 பேர்
உட்பட 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (புதன்கிழமை) இந்தியாவில் இதுவரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 28 பேருக்கு மருத்துவப் பரிசோதனையில் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த 28 பேரில், இத்தாலியைச் சேர்ந்த 16 பேரும் அடங்குவர். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான நபர் ஆக்ராவுக்கு சுற்றுலா சென்றபோது அவருடன் பழகிய 6 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய டெல்லியில் ஒருவருக்கும் ஆக்ராவில் 6 பேருக்கும் இத்தாலியைச் சேர்ந்த 16 பேருக்கும் ஒரு இந்திய ஓட்டுநருக்கும் தெலுங்கானாவில் ஒருவருக்கும் கேரளாவில் மூன்று பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை நேரில் சந்தித்து மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7